Header Ads Widget

<

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மீண்டும் முழு ஊரடங்கு அமல் | TAMILNADU LOCKDOWN CORONA LATEST NEWS 2022

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. நாட்டின் பொருளாதாரமும் படிப்படியாக சீராகி வந்த நிலையில் ஓமிக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, ஹரியானா, மிசோரம், உத்திரபிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2483 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனவால் பலியானோர் எண்ணிகள் 1399 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தொற்றுப்  பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவர்களுக்கு 100க்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும்படி  உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் கொரோனா சிகிச்சைக்காக அனைத்து மருத்துவமனைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமும்  விதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்றும் அதன்படி இரவு நேர ஊரடங்கு, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, கடைகளுக்கான நேர கட்டுப்பாடு, பேருந்து போக்குவரத்தில் நேரக் கட்டுப்பாடு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு வெளியான தகவல்