Header Ads Widget

<

60 வயது மேற்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு - TAMILNADU SENIOR CITIZEN FREE SCHEME LATEST NEWS 2022


தமிழக அரசு அவ்வப்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மூத்த குடிமக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை 

சார்பதிவாளர் அலுவலர்களுக்கு வரும் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் உடனே ஆவண பதிவு செய்யும் வகையில், மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு எழுதி கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது (70) வயதை கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள் பதிவுநாளான்று எந்த வரிசையில் டோக்கன் பதிவு செய்திருந்தாலும் அந்த டோக்கன்களை உடனடியாக பதிவு செய்யும் வண்ணம் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே மூத்த குடிமக்கள் சார்பதிவாளர் அலுவகத்திற்கு வந்து பதிவு செய்த உடனே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணத்தை பதிவு செய்து அன்றே திரும்பி வழங்கக்கூடிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

கட்டணமில்லா பேருந்து பயணம் 

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில், மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், 60 க்கும் மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், பயண அட்டைகள் 40 மையங்களில் இந்த மாதம் இறுதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர் 1.08.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். ஆகையால் சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண அட்டை டோக்கன்களை புதிதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவிலான  புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.