Header Ads Widget

<

வங்கி நகைக் கடன் உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் புதிய மாற்றம்


நகை கடன் குறித்து இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் மற்றும் நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில், நகை கடன் வாங்கியவர்கள் பலர், முழு தொகையும் செலுத்த முடியாமல் வட்டியை மட்டும் செலுத்தி வந்து, அசலை கட்ட முடியாமல் நகையை மீட்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில், அவர்கள் பயன்பெறும் வகையில், புதிய சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவரவுள்ளது. இந்த புதிய சலுகையின் படி, வீடு, வாகனக் கடன் போலவே, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணை முறை, விரைவில் நகைக் கடனுக்கும் கொண்டு வரப்படவுள்ளது. நகைக் கடனில், வட்டி மற்றும் அசலை கணக்கிட்டு, இ.எம்.ஐ.,யில் அதாவது, மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வங்கிகள், தங்க நகைக் கடன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற உள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், தங்க நகைக் கடன் தொகை, நகை மதிப்பீடு, நகை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை, நகைக்கு இணையான கடன்தொகை விகிதம், ஒரே அடமானக் கடன் மீது கூடுதல் கடன் ஆகியவற்றில், பல குறைபாடுகள் தெரிய வந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் கீழ், நகை கடன் பெற்றவர்கள்  அசல் மற்றும் வட்டி இரண்டையும் சமமான மாதாந்திர தவணைகளில் (EMI) கடன் காலத்தின் தொடக்கத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். இதன்படி, பெறப்படும் நகைக் கடனுக்கு வட்டியை மட்டும் கட்டாமல், குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து, வீடு, வாகனக் கடன் போல, அசலில், குறிப்பிட்ட தொகையையும் சேர்த்து, மாதத் தவணையில் கட்டலாம். இதனால், குறிப்பிட்ட ஆண்டுகளில், நகைக் கடன் அடைவதுடன், அசலைக் கட்ட முடியாமல், நகைகள் ஏலம் விடப்படுவது தவிர்க்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கும் நன்மை ஏற்படும். இந்த புதிய விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் நகை கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் நகைக்கடன் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்; கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் வங்கிகள்  அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் வாங்கியவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.