ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. அடுத்தபடியாக இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் வென்றுள்ளன. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் களம் இறங்குகின்றனர். இந்த நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ஷேன் வாட்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது; ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. 28ம் தேதி நடக்கவிருக்கிற போட்டியில் வெற்றி வாகை சூடும் அணியே கோப்பையை வெல்லும். என்னை பொறுத்தவரை இந்திய அணி இந்த முறை வெற்றி பெறும் என்று நினைக்கிறன். கடந்த T20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதை போல இந்த முறை பாகிஸ்தானால் வீழ்த்த முடியாது. தற்போது இந்திய அணி மிகவும் பலமான அணியாக உள்ளது. இந்திய வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங் பந்து வீச்சிலும் சிறப்பாக உள்ளது. ஆகவே ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றும் என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.