பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தமிழக அரசு எத்தனையோ சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருவது செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸ் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. மக்கள் வசதியாகப் பணத்தைச் சேமிக்கவும், அவர்களின் சேமிப்பில் வட்டியைப் பெறவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை சேமிப்பு தொகையாக செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கணக்கில் கொண்டு பணம் செலுத்த வேண்டும். இதில் 7.1% வட்டி வழங்கப்படும். இந்த வட்டி விகிதமானது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். இந்த திட்டத்தில் 7.1 சதவிகித வட்டியில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ.500 வைத்து மாதம் செலுத்தினால் 15 வருடத்திற்கு 90 ஆயிரம் செலுத்துவீர்கள். இதற்கு 1.63 லட்சம் உங்களுக்கு முதிர்வு தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 15 வருடங்கள் ஆகும் . கணக்கு தொடங்கப்பட்டது முதல் 7 ஆவது ஆண்டில் 50% தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். 15 ஆண்டுகள் முடிவுற்ற பின் கணக்கினை முடித்து கொள்ளலாம். சிலருக்கு முன்னதாகவே பணம் தேவைப்பட்டால், கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பின் பணத்தை எடுத்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் உங்கள் சேமிப்பு கணக்கில் நீங்கள் போடும் பணத்திற்கு எவ்வித வடியும் நீங்கள் செலுத்த தேவையில்லை. எனவே, உரிய காரணத்தினை கூறும் பட்சத்தில் நீங்கள், முன்னதாகவே பணத்தைப் பெறலாம். செக்ஷன் 80சி பிரிவின் கீழ் இந்த திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுவதுடன், வட்டிக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
தகுதிகள்
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய 10 வயதிற்கு மேல் இருந்தால் அவர்களின் பெயரிலோ அல்லது 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஜாயிண்ட் அக்கௌன்ட் மூலமாகவோ தொடங்கலாம். அதாவது பெற்றோர் பெயரும் குழந்தையின் பெயரும் சேர்த்து அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். இந்த திட்டத்தில் சேமிக்க எந்த வயது வரம்பும் இல்லை. இதற்காக அக்கௌன்ட் ஓபன் செய்ய விரும்பும் பெற்றோர் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் ஓபன் செய்து கொள்ளலாம். தேவைப்படும் ஆவணங்கள்: இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், புகைப்படம். பெற்றோர்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் சரியான முகவரி ஆகியவை தேவைப்படும்.