Header Ads Widget

<

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் லாக்டவுன் வருமா ?

நாடு முழுவதும்  தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  8 பேர் கொரோனவால்  உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புகள் 5,000ஐத் தாண்டியுள்ள நிலையில், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில்  அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு தயார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதுபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வீரியல் இல்லாத கொரோனா என்று கூlறப்பட்டாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் லாக்டவுன் போடமாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலால் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் “கொரோனா பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.