Header Ads Widget

<

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு? வெளியான அறிவிப்பு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியுடன், அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. அதன்பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மே முதல் வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் கோடை விடுமுறையை கழிக்க  மாணவர்களும் பெற்றோர்களும், வெளியூர் பயணங்களை மேற்கொண்டு ஊர் திரும்பி வருகின்றனர். சிலர் கல்வி சார் பயிற்சி வகுப்புகள், விளையாட்டு முகாம்களில் கலந்து கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியானது. கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் திட்டமிட்ட படி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



இந்த நிலையில் நாடு முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்  அதன்படி, தமிழகத்தில், தினமும் 10 முதல் 15 எண்ணிக்கையில் தொற்று பரவி வருகிறது. இவற்றால் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவு வைரஸ் தான் உள்ளது. புதிய பாதிப்புகளும், வீரியமும் இல்லை. இந்த கொரோனாவால் பதற்றம் வேண்டாம். கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை தற்போது இல்லை என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்க வாய்ப்பில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் முதல் வாரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, அதிகனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.