Header Ads Widget

<

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி புதிய மாற்றம் வெளியான அறிவிப்பு

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியுடன் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. அதன்பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் வெளியூர் பயணங்களை ஏற்கனவே திட்டமிட்டு பலரும் புறப்பட்டு விட்டனர்.



மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குடும்பத்துடன் சென்று சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். சிலர் கல்வி சார் பயிற்சி வகுப்புகள், விளையாட்டு முகாம்களில் கலந்து கொண்டு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் இரண்டாவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவது வழக்கம். இதை வைத்துதான் வெளியூர் சென்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரும்பி வரவுள்ளனர். இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க ஏதுவாக இருக்கும். அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரித்து வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே ஜூன் மாதத்தில் வானிலை முன்னறிவிப்பின்படி வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்படும் என்றும், வெயிலின் தாக்கம் குறைந்தால்  பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.