Header Ads Widget

<

உங்கள் வீட்டில் வயதானவர்கள் உள்ளனரா? அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் 60 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுக்கு (SENIOR CITIZEN) பல சலுகைகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் ரயில் பயணம், பேருந்து பயணம், அஞ்சல் துறை, வங்கிகள், ரேஷன் கடைகள், ஓய்வூதியம் போன்றவற்றிக்கு சிறப்பு சலுகைகள் அவர்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கும் சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது முக்கியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு, 'மொபைல் செயலி' (SENIOR CITIZEN APP) மற்றும் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இந்த செயலியை தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் (SENIOR CITIZEN APP) மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மருத்துவமனை விபரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்கவும், மூத்த குடிமக்கள் MOBILE APP  வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கூகுள் பிளே ஸ்டோரில் (SENIOR CITIZEN APP) மூலமாகவோ அல்லது Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் இதன் பலனை பெறலாம். இந்த  ஆப் மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து பொதுமக்களிடமும் இந்த செயலி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக சீனியர் சிட்டிசன்களுக்கு இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண்-14567 அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி செயல்படுகிறது. இந்த உதவி எண் மூலமாக மீட்பு உதவி, முதியோர் இல்லங்கள், முதியோர் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிக்காட்டுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. எனவே மூத்தகுடிமக்கள் இந்த உதவி எண்ணை (14567) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.