டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் II & IIA (TNPSC-2025-EXMAM) முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. (TNPSC-2025-EXMAM) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு (TNPSC-2025-EXMAM) தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போட்டிதேர்வுகளுக்கு திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் (TNPSC-2025-EXMAM) நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
TNPSC Group II மற்றும் IIA போட்டித்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பானது மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2025 அன்று முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்படவுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி Group II மற்றும் IIA (TNPSC-2025-EXMAM) முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இப்பயிற்சி மாணவர்கள் வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆகவே விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி "மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 32 என்ற முகவரியில் நேரில் அணுகலாம். தொலைபேசி எண் : 044-22500134, 9361566648 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.